SSLV விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் “தரவு இழப்பு” – முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவின், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-02) மற்றும் சக-பயணிகள் மாணவர் செயற்கைக்கோள் AzaadiSAT ஆகியவற்றை சுமந்து கொண்டு ISRO தனது முதல் SSLV பணியை இன்று முன்னதாக தொடங்கியது. இருப்பினும் முனைய கட்டத்தில் “தரவு இழப்பை” சந்தித்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.
SSLV-D1:
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என முன்னதாக அறிவித்தது, மேலும் அதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கியது. இதையடுத்து எஸ் எஸ் எல் வி செயற்கைகோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சியை கையாண்டது. என்னவென்றால், நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளை கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக தேர்வு செய்தது. இதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – ஹாப்பி நியூஸ் வெளியீடு!
பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ஆகியவற்றுக்குப் பிறகு எஸ்எஸ்எல்வி ராக்கெட் இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதல் வாகனமாகும். இஸ்ரோவின் மிகச்சிறிய ஏவுகணை வாகனமான எஸ்எஸ்எல்வி டி-1 ஆனது, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து பெண் குழந்தைகள் குழுவால் உருவாக்கப்பட்ட 75 சிறிய மென்பொருட்களை சுமந்து செல்லும், 8 கிலோ எடையுள்ள மைக்ரோசாட்லைட் ஆசாதி-சாட் செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையை தளமாகக் கொண்ட அமைப்பு, நிதி ஆயோக் உடன் இணைந்து இப்பணியை வழிநடத்தியது.
Exams Daily Mobile App Download
அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் இருந்து தலா 10 பெண்களை (8 முதல் 10 ஆம் வகுப்பு வரை) தேர்ந்தெடுத்து, சிறிய சோதனைகளை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளித்தனர், பின்னர் அவை செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப்பட்டன. இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மூலமாக இஸ்ரோ உதவியது. இதனைத் தொடர்ந்து மாணவிகள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 75 பள்ளிகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட மென்பொருள் மூலம் 7ம் தேதி(இன்று) எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி வைக்கிறார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், ISRO தனது முதல் SSLV பணியை தொடங்கியது, இந்நிலையில் SRO தலைவர் எஸ் சோமநாத் இன்று, விண்வெளி ஏஜென்சியின் முதல் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (SSLV) முனைய கட்டத்தில் “தரவு இழப்பை” சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது” எல்லா நிலைகளும் எதிர்பார்த்தபடியே நடந்தன. முதல் நிலை நிகழ்த்தப்பட்டு பிரிக்கப்பட்டது, இரண்டாம் நிலை நிகழ்த்தப்பட்டது மற்றும் பிரிக்கப்பட்டது, மூன்றாம் நிலையும் நிகழ்த்தப்பட்டது மற்றும் பிரிக்கப்பட்டது, மேலும் பணியின் முனைய கட்டத்தில், சில தரவு இழப்பு ஏற்படுகிறது மற்றும் நாங்கள் தரவை பகுப்பாய்வு செய்கிறோம் ” என கூறியுள்ளார்.