விவாகரத்து வாங்கிய கோபி பாக்கியா, ராதிகாவின் அடுத்த முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இத்தனை நாள் தன்மானத்தை விட்டு கோபி உடன் பாக்கியா வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கோபியை விட்டு பிரிய பாக்கியா முடிவு செய்துவிட்டார். இந்நிலையில் ஈஸ்வரி பாக்கியாவின் இந்த முடிவால் கோவப்பட்டு ராதிகாவிடம் சண்டை போடுகிறார். இனி வரும் எபிசோடுகளில் ராதிகா என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லாமல் கதைக்களம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 25 வருடமாக ஒன்றாக வாழ்ந்த தன்னுடைய கணவன் தன்னை ஏமாற்றிவிட்டார் என தெரிந்து பாக்கியா மிகவும் மன வருத்தப்படுகிறார். அதனால் கோபியின் ஆசையின்படி விவாகரத்து கொடுக்க பாக்கியா முடிவு செய்கிறார். இந்நிலையில் ராதிகாவால் தான் குடும்பம் இப்படி ஆகிவிட்டது என்பதால் ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு சென்று சரமாரியாக கேள்வி கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
உன் மீது அவ்வளவு அன்பு வைத்த பாக்கியாவை ஏமாற்ற உனக்கு எப்படி மனம் வந்தது என கேட்கிறார். நீ விஷப்பாம்பு என தெரியாமல் உன்னை என் குடும்பம் நம்பியதால் தற்போது நாசமாகிவிட்டது. என் குடும்பம் அழும் அழுகையை விட நீ 100 மடங்கு அழுவாய் என சொல்லி சாபம் விடுகிறார். அப்போது மயூரா வர என் பேத்தி அப்பா இல்லாமல் எப்படி அழுகிறாளோ அதை விட 1000 மடங்கு உன் மகள் அழுவாள் என சாபம் விடுகிறார். ராதிகாவின் அம்மா ஆதரவாக இருக்க ஆனால் அவரை ஈஸ்வரி பேச விடாமல் செய்கிறார்.
விவாகரத்து பெற்ற கோபி பாக்கியா, கடுப்பில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இந்நிலையில் கோர்ட்டிற்கு சென்ற பாக்கியா கோபியை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார், கோர்ட் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கிறது. அதனால் கோபிக்கு இனி ராதிகா உடன் வாழ்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இதற்கிடையில் ராதிகாவின் அம்மாவும் ராதிகா கோபியை கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என சொல்வதால் இனி வரும் எபிசோடுகளில் பாக்கியா மீது கோவப்பட்டு ராதிகா கோபியை திருமணம் செய்து கொண்டு வாழ இருக்கிறார். அப்போது தான் கோபிக்கு, பாக்கியா பற்றிய அருமை எல்லாம் தெரியவர இருக்கிறது.