விவாகரத்து பெற்ற கோபி பாக்கியா, கடுப்பில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோர்ட்டில் காத்துக் கொண்டிருக்க எழில், அப்பா வருவார் என்ற நம்பிக்கை இல்லை என சொல்கிறார். ஆனால் பாக்கியா உறுதியாக இருக்க கோபி வருகிறார். பின் கோர்ட்டில் எனக்கு விவாகரத்து வேண்டும் என பாக்கியா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் எழிலும் கோர்ட்டில் காத்துக் கொண்டிருக்க, எழில் எனக்கு என்னமோ அப்பா வருவார் என நம்பிக்கை இல்லை, அப்பா வரவில்லை என்றால் என்ன செய்வது என எழில் கேட்க, உனக்கு அப்படி தோன்றுகிறதா என பாக்கியா கேட்கிறார். ஆமாம் என எழில் சொல்ல, விவாகரத்து கேட்டது அவர் தான், எனக்கு தெரியாமல் கையெழுத்து வாங்கியது அவர் தான், என்ன தான் வெளியே முடியாது என சொன்னாலும் உள்ளே சந்தோஷப்படுவார் என பாக்கியா சொல்ல, குற்ற உணர்ச்சியே இல்லாமல் தவறு செய்ய எப்படி மனம் வந்தது என எழில் கேட்க, அதை பற்றி நான் யோசிக்கும் மனநிலையில் இல்லை என பாக்கியா சொல்கிறார்
அப்போது கோபி கோர்ட்டிற்கு வருகிறார். கோபி, பாக்கியாவை பார்த்து முறைத்து கொண்டே வந்து அமருகிறார். எழில், நான் வரமாட்டார் என நினைத்தேன் என்ன சொல்வார் நானும் விவாகரத்து கொடுக்க ரெடி என சொல்வாரா? இல்லை உன்னிடம் கெஞ்சுவாரா? என கேட்க அவர் ஏதோ செய்யட்டும் என பாக்கியா சொல்கிறார். பின் நீதிபதி கோர்ட்டிற்கு வருகிறார். அவர் பாக்கியலட்சுமி, கோபி வாங்க என சொல்ல, உங்களுக்கு விவாகரத்து வேண்டுமா? இல்லை கவுன்சிலிங் போறீங்களா? என கேட்க உடனே பாக்கியா வேண்டாம் மேடம் அவர் கேட்டது போல நான் விவாகரத்து கொடுக்கிறேன் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
உங்க இருவருக்கும் கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. அதனால் அவசர படாதீங்க, எல்லாரும் கல்யாணம் முடிந்து சில ஆண்டுகளில் விவாகரத்து கேட்பார்கள், ஆனால் நீங்க இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துருக்கீங்க என சொல்ல பாக்கியா விவாகரத்து கொடுக்க தயார் என சொல்ல, கோபியிடம் முடிவை கேட்கிறார் நீதிபதி, எனக்கு விவாகரத்து வேண்டும் என கோபி சொல்ல நீதிபதி ஆம்பளைங்க சுலபமாக சொல்லி விடுவார்கள் நீங்க யோசித்து சொல்லுங்கள் என சொல்ல, நம்பிக்கை விட்டு போனால் விவாகரத்து வாங்குவது சரி தான், அவர் தான் ஆசைப்பட்டார் அதை செய்வது தான நல்ல பொண்டாட்டிக்கு நல்லது என சொல்கிறார்.
எனக்கு துணை இல்லாமல் காட்டுக்குள்ள நடப்பது போல இருக்கிறது. வலிக்கிறது என தெரிந்தும் ஏன் அதை சுமக்கிறோம் பின்னாடி அது சரியாகிவிடும் என்பதால் தான். உங்களை விட்டால் எனக்கு என்ன இருக்கு என நான் அழ வேண்டும் என எல்லாரும் எதிர் பார்க்கலாம். அதெற்கெல்லாம் அவசியம் இல்லை, சுயமரியாதை இருக்கும் யாரும் உழைத்து சம்பாரிக்க பல வழி இருக்கிறது. என்ன தான் புருஷன் பொண்டாட்டியாக இருந்தாலும் நம்மை அடிமை மாதிரி நடத்துவார்கள் அதில் இருந்து வர பக்குவம் தேவை படுகிறது என பாக்கியா சொல்கிறார்.
நீதிபதி, நீங்க நல்லா யோசித்து தான் முடிவு செய்து இருக்கீங்க போல அதனால் இந்த கோர்ட் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்கிறது என சொல்கிறார். கோபி அதை நினைத்து கோபப்படுகிறார். பின் பாக்கியா வெளியே வர கோபி அதிர்ச்சியில் இருக்கிறார். எழில், பாக்கியாவிடம் உனக்கு விவாகரத்து கொடுத்ததை நம்புறியா என்னால் நம்ப முடியவில்லை சாதாரணமாக விவாகரத்து கேஸ் என்றால் 4ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்படி சீக்கரம் முடிந்துவிட்டது என சொல்கிறார். அவர் உன்னை ஏமாற்றி விவாகரத்து வாங்கியதை நீ சொல்லிருக்க வேண்டும் என சொல்ல, தேவை இல்லடா, அவரை அவமானப்படுத்த வேண்டாம் என பாக்கியா சொல்கிறார்.
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அப்போது கோபி கோவமாக வந்து என்ன கோர்ட்டில் பெரிய ஆள் மாதிரி பேசுகிறாய், என்ன விவாகரத்து வாங்கிவிட்டு நீ நிம்மதியாக வாழ்ந்துவிடுவாயா என கேட்கிறார். இப்போ எழில் உன்னுடன் இருக்கான் என பொங்கி எழுகிறாய், அடுத்த படம் வந்துவிட்டால் அவன் சென்றுவிடுவான். வெளியே சென்று சம்பாரிப்பது என்ன, குடும்பத்தை நிர்வாகிப்பது எப்படி எல்லாம் உனக்கு தெரியுமா? உடம்பு முழுவதும் ஆணவம், அதான் நீதிபதி முன்னாடி அப்படி பேசுகிறாய், நான் நினைத்தால் உனக்கு தெரியாமல் என்னால் அவளுடன் வாழ முடியும். நீ சொல்லலாம் நான் தான் கண்டுபிடித்தேன் என ஆனாலும் நான் சொல்லிருப்பேன்.
என்னை பழி வாங்க நினைக்கிறியா, உன்னை நீயே பழி வாங்க நினைக்கிறாய் என சொல்கிறார். நீ குடும்பத்திற்கு உழைத்தாய் என்றால் நான் யார் என கோபி கேட்கிறார். இத்தனை நாள் என்னுடைய சந்தோசத்தை நினைக்காமல் நான் குடும்பத்திற்கு செய்தேன், அப்போ நான் யார் என கேட்கிறார். வீட்டிற்காக பார்த்து பார்த்து செய்தேன், ஆனால் நீ தோசை, இட்லி செய்தால் மட்டும் எல்லாம் வராது என சொல்கிறார். அன்னைக்கு ஏமாத்திட்டேன் ஏமாத்திட்டேன் என கத்துணியே உண்மையாகவே ஏமாந்தது நான் என கோபி சொல்கிறார்.