சபரிமலை செல்வோர் கவனத்திற்கு – ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை விடுப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனை தொடர்ந்து பல இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் சபரி மலைக்கு வரும் பக்தர்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் மாநிலத்தில் 178 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரை கனமழைக்கு 18 பேர் வரை உயிரிழந்ததாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்!
இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இக்கோவிலுக்கு செல்ல முதலில் பம்பை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். ஆனால் தொடர் மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆதலால் பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் நேற்று நடைபெற்ற நிறபுதாரி பூஜை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் அதீத வெள்ளப்பெருக்கு காரணமாக, பம்பை ஆற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பத்தனம்திட்டா முதல் எருமேலி வரையிலான சாலைகள் அனைத்தும் சீரமைத்து பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்களும் நேற்று காலை முதல் வருகை புரிய தொடங்கினர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விட்டுள்ளது. அதனால் சபரிமலை கோவிலில் உள்ள பக்தர்களை வெளியேறும்படி கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் பக்தர்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.