தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடர்ந்து தற்போது சட்ட கல்லூரிகளிலும் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . அந்த வகையில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு தொடங்கி உள்ளது.
சட்ட கல்லூரி சேர்க்கை
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. அந்த வகையில் கடந்த ஜூன் 20ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. மேலும் ஜூலை 23ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் CBSE பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தாமதமாக வந்த நிலையில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் சுமார் 2,11 115 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
WFH ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதற்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் இன்று கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற தொடங்கியுள்ளது. இதையடுத்து கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 05) முதல் 3 ஆண்டு LLB சட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பபதிவு தொடங்கி உள்ளது.
Exams Daily Mobile App Download
இ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் 1,000 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. இதில் பயில விரும்பும் மாணவர்கள் http://www.tndalu.ac.in/ என்ற இனையதளம் வாயிலாக ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மேலும் தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 5 சட்டப் படிப்புக்கு விண்ணப்பபதிவுகள் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.