GATE மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி பொறியாளர் நியமனம் கூடாது? பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
NLC இல் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது என கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை தொடர்ந்து மீண்டும் மற்றொரு கடிதம் மூலம் கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம்:
கடந்த முறை NLC நிறுவனத்தில் இருந்த 299 பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழர்களை தேர்வு செய்யாமல், முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, அந்த வேலைவாய்ப்பினை வட மாநிலத்தவர்களையே தேர்வு செய்தனர். இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், கடுமையான கோவத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆண்டில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
தமிழக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – மாநகராட்சி எச்சரிக்கை!
அதாவது, கடந்த மே மாதம் 5 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், அவர்களை சிறப்பு தேர்வின் மூலம் பணியிடங்களில் நியமிக்கப்பட வேண்டும். கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து தற்போது, மீண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னதாக எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் மாண்புமிகு பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.