மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரை!
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற தமிழகத்தில் மொத்தம் 6 ஆசிரியர்களை பள்ளிகல்வித்துறையின் மாநில தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. இவர்களுக்கான மதிப்பீடு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நல்லாசிரியர் விருது:
நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது மாநில அரசின் பரிந்துரையின்படி வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற தமிழகத்தில் மொத்தம் 6 ஆசிரியர்களை பள்ளிகல்வித்துறையின் மாநில தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன் படி ஏ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி (தலைமை ஆசிரியை, திருப்பூர் ஜெய்வாய்பாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ராஜலட்சுமி ராமசந்திரன் (தலைமை ஆசிரியை, குண்டூர் சுப்பையா பிள்ளைதி.நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஏ.முருகன் (பட்டதாரி ஆசிரியர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி).
தமிழகத்தில் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை – வனத்துறையினர் அதிரடி
இவர்களுடன் ஆர்.ஜெரால்ட் ஆரோக்கியராஜ் (பட்டதாரி ஆசிரியர், கரூர் மாவட்டம், பில்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி), கே.பிரதீப் (பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, கே.ராமச்சந்திரன் (இடைநிலை ஆசிரியர், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மதிப்பீடு நேர்காணல் தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.