தமிழகத்தில் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை – வனத்துறையினர் அதிரடி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடரும் நிலையில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க கூடாது என தமிழக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கனமழை:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை 103 விழுக்காடு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த மே மாதம் முதலே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இதே போல் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்த நிலையில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் – மூன்று மடங்காகும் பென்சன் தொகை? முழு விவரம்
மேலும் இந்த கனமழையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கனமழை தொடர்வதால் அங்குள்ள பிரபலமான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாசிலா அருவி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.