நாடு முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவல் – அவசர நிலை அறிவித்த அரசு!
உலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று அமெரிக்காவில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதால் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய்
ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு அம்மை வைரஸ் தாக்கம் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. அந்த வகையில் 75 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அமெரிக்காவிலும் 6,600க்கு அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்பட பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதிப்பு அதிகம் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி செய்து வருவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவைகள் முடக்கம்! இதற்காக தான்
மேலும் இதுகுறித்து அமெரிக்கா சுகாதாரத்துறை செயலாளர் சேவியர் பெசிரா கூறுகையில், அமெரிக்கா மக்கள் குரங்கு அம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அவசர நிலை குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.