தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 30) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின் விநியோகத்தில் பீடர் எனப்படும் மின் வழித்தடங்கள், மின்மாற்றிகள், மின்விநியோக பெட்டிகள், மின் கம்பம், கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலமாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் அவை எப்போதும் வெப்பமாக இருக்கும். இதில் பழுது ஏற்படாமல் தடுக்க மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் துணை மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளான தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, வி.இ .ரோடு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தமிழகத்தில் பொது போக்குவரத்து பயன்பாடு அதிகம் – பெட்ரோல், டீசல் விலை எதிரொலி
மேலும் சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் ஸ்டேட் வங்கி காலனி இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுறம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையாண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூலை 30 )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.