ரயில் பயணிகளின் கவனத்திற்கு – முக்கிய ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தெற்கு ரயில்வே நிர்வாகம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஜூலை 24ம் தேதியான நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயிலின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் ரத்து:
இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ரயில்வே வாரியம் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.
Post Office ல் 50 ரூபாயில் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!
மேலும், முன்புபோல முன்பதிவு ரயில்களின் இயக்கம் தொடங்கியது. அதிலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட வசதிகளின் மூலம் பயணிகள் பல அம்சங்களை எளிமையாக பயணப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஜூலை 24ம் தேதியான நாளை நெல்லை – பிலாஸ்பூர் ரயில் (22620) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாக்பூர் கோட்டம் கலம்னா ரயில் பாதையில் பராமரிப்பு பணிகளால் நெல்லை – பிலாஸ்பூர் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், ரயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.