அடுத்த நான்கு நாட்களுக்கு ‘மஞ்சள்’ அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாநிலம் முழுவதும் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், கனமழையை குறிக்கும் வகையில், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை அறிவிப்பு:
தற்போது தென்னிந்தியா முழுவதும் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல அணைகளும் நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பல இடங்களில் பயிர் நிலங்களும் சேதம் அடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வி மையம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை, நகரில் மழை பெய்தது, குத்புல்லாபூரில் 26.6 மிமீ மழையும், செரிலிங்கம்பள்ளியில் 26 மிமீ மற்றும் உப்பலில் 25.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மாநிலத்தில், சூர்யாபேட்டையில் உள்ள மேல செருவு அதிகபட்சமாக 105.8 மி.மீ மழையும், அதைத் தொடர்ந்து ஊர்லுகுண்டா, சூர்யாபேட்டை 92.8 மி.மீ., மற்றும் நாடிகுடெம், சூர்யாபேட்டை 91.5 மி.மீ. என்ற அளவில் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால், அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) – ஹைதராபாத் முன்னறிவிப்பு செய்துள்ளது. மேலும், கனமழையைக் குறிக்கும் வகையில், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு முன்னறிவிப்பு:
ஜூலை 24:
அடிலாபாத், கும்ரம்பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், கரீம்நகர், பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மற்றும் முலுகு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
LPG சிலிண்டர் மானியம் வரவில்லையா? இதோ பெறுவதற்கான வழிமுறைகள்!
ஜூலை 25:
நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், ராஜண்ணா சிர்சில்லா, கரீம்நகர், பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, ஜனகான் மற்றும் சித்திப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 26:
பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுடம், கம்மம், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மஹபூபாபாத், வாரங்கல் (கிராமப்புறம்), வாரங்கல் (நகர்ப்புறம்), ஜனகான், சித்திப்பேட்டை மற்றும் யாதாத்ரி புவனகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.