LPG சிலிண்டர் மானியம் வரவில்லையா? இதோ பெறுவதற்கான வழிமுறைகள்!
இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்காக நாம் பயன்படுத்தும் LPG கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியத் தொகை வழங்கி வருகின்றது. இந்த மானியத் தொகை சரியான முறையில் நமது வாங்கி கணக்கிற்கு அனுப்பப்படவில்லை என்றால் அதை சரி செய்யும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம்:
நமது நாட்டில் மத்திய அரசின் முயற்சியால் அனைத்து பகுதிகளிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. அதாவது நாடுகளில் இருக்கின்ற கிராம வாசிகள், ஏழை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகிய அனைவருக்கும் மத்திய அரசு “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் சிலிண்டர்கள் இலவசமாக பயன்படுத்தும் சேவையை செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் LPG சிலிண்டர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மணியமாக மத்திய அரசு வழங்குகிறது. நாம் சிலிண்டர் வாங்கும் போது வாங்கிய சிலிண்டர் தொகையில் இருந்து வாடிக்கையாளர் வங்கி கணக்கிற்கு அரசு தரப்பில் மானியமாக செலுத்தப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிலிண்டர்க்கு முன்பதிவு செய்யும் போது மணியத்தொகை வருகிறதா என்பதை தெரிந்து கொள்ள மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அதிக வட்டி – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
- சிலிண்டெர் மானியம் குறித்து சரிபார்ப்பதற்கு முதலில் Mylpg.in என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
- இந்த இணைப்பை திறந்தவுடன் அதன் வலது பக்கத்தில் கேஸ் சிலிண்டரின் புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
- நீங்கள் உபயோகிக்கும் நிறுவனத்தின் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
உடனெய் புதிய பக்கம் ஒன்று திறக்கும் அதில் “Give your feedback online” என்பதை கிளிக் செய்ய வேண்டும். - வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
- பின்பு “feedback” என்பதனை கிளிக் செய்யவும்.
- பின்னர் “complaint” விருப்பத்தை தேர்ந்தெடுத்து next கொடுக்கவும்.
- உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பகத்தில் வெளியாக்கும். உங்கள் வங்கி கணக்கிற்கு மானிய தொகை வந்ததா இல்லையா என்பதை நீங்கள் பார்க்கலாம்.
- உங்கள் மானிய பணம் கிடைக்காவிட்டால் உடனடியாக 18002333555 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகாரினை பதிவு செய்யலாம்.