உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் – 14 ஆயிரம் பேர் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மை நோய்த் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
குரங்கு அம்மை நோய்:
கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. குரங்கு அம்மை என்பது ஒருவகையான அம்மை நோய். இது வைரசில் இருந்து பரவுகிறது. சின்னம்மை, பெரியம்மை நோய் போல குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இதுதொடர்பாக மத்திய அரசு அறிவுரைகள் வழங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 12ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய் பரவலை தடுக்கும் வகையில் அவருடன் பயணித்தவர்கள், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கேரளா-தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு நடக்கிறது. மேலும் 63 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்று சோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.