சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்நிலையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதாவது, திடீரென விலை உயர்வதும், திடீரென விலை குறைவதுமாய் இருந்து வருகிறது. இருந்தாலும் தங்க நகைகளில் முதலீடு செய்வது லாபம் தரும் திட்டமாக தாய்மார்கள் எண்ணுகின்றனர். மேலும், தங்கத்தின் விலை தற்போது மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களிலும் உயரத் தான் போகிறது. இதனால், தங்க நகைகளை பணம் இருக்கும் போதே வாங்கிக்கொண்டால் அது எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்கும் என தாய்மார்கள் எண்ணுகின்றனர்.
Exams Daily Mobile App Download
பங்குசந்தைகளில் நிகழும் ஏற்றுமதி இறக்குமதியின் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுமே தங்கத்தின் விலை உயர்ந்தபடியே தான் இருந்து வந்தது. அதாவது சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,336 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4667 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பு!
நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 குறைந்து ரூ.4,630க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.61க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.296 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.