TRB நடத்தும் டெட் தேர்வில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் புதிய பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்ய உள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வுகளுக்கு தயாராகும் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
புதிய பாடத்திட்டம்:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்தவொரு போட்டித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது அனைத்து துறைகளும் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளன. அனைத்து விதமான போட்டித்தேர்வுகளும் நடத்த அனுமதி வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது, மேலும் வருகிற 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது.
JEE தேர்வர்களுக்கான அட்மிட் கார்டு 2022 வெளியீடு – NTA தகவல்!
தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி 1 முதல் 8 வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். கடைசியாக 2019 ம் ஆண்டில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் 2020-2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் கட்டாய தாள் கொண்டுவர பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி யால் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழக பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றும் வகையில் டி.ஆர்.பி தேர்வுகளில் தமிழ் கட்டாய தாள் அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் கட்டாய தாள் அமலில் உள்ளது. அதனை பின்பற்றி டி.ஆர்.பி யும் தமிழ் தாளை கட்டாயமாக்கும் அறிவிப்பினை வெளியிடும் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.