பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை வெளியீடு!
லண்டனில் வழக்கத்திற்கும் மாறாக அதிகளவில் வெப்பம் கொளுத்தி கொண்டிருப்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறி ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு:
இந்தியாவில் சில மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கூடுதல் கனமழை பெய்து வருகிறது. ஆனால், லண்டனில் தற்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!
இந்த சமயத்தில் பள்ளி மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், லண்டனில் உள்ள பள்ளிகளை மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி உடனடியாக மூட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால்,வெப்பத்தை காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படக் கூடும் என்பதற்காக லண்டனில் சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது, தீவிரமான உடல் உழைப்பு கொண்ட பாடங்களை மாணவர்களுக்கு கொடுப்பதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் தளர்வான வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும், சூரிய தொப்பி அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓவன் போன்ற வெப்பத்தை உருவாக்கும் கருவிகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ரெட் அலார்ட் கொடுக்கப்படும் போது பள்ளிகளை முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மூட உத்தரவிடப்படும். ஆனால், தற்போது மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.