திருப்பூரில் நாளை ( ஜூலை 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை ஜூலை 13ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பெருமாநல்லூர், அருள்புரம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை எந்தெந்த ஏரியாக்களில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி தவறாமல் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை செய்யப்படும். அந்த வகையில் திருப்பூரில் நாளை ஜூலை 13ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருமாநல்லூர், அருள்புரம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில் அருள்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அல்லாளபுரம் உயர் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கணபதி பாளையம், எஸ்.எம்.சி காலனி, பாலாஜி நகர், திருமலை நகர், பொன்னகர், அவரபாளையம், அல்லாளபுரம், வடுகபாளையம் அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், வாவிபாளையம், பூலுவபட்டி, பாண்டியன் நகர், ஆண்டிபாளையம், செட்டிபாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, நெருப்பெரிச்சல், அய்யம்பாளையம், தொரவலூர், வலசு பாளையம், கந்தம்பாளையம், எம்.தொட்டிபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இதையடுத்து பழங்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட அவினாசி,லிங்கம்பாளையம், பழங்கரை, தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், தேவம்பாளையம், கைகாட்டிபுதூர், டீ பப்ளிக் ஸ்கூல், நல்லிக்கவுண்டம்பாளையம், ரங்கா நகர், ராஜன் நகர், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியர்காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.