12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் – வானிலை மையம் அறிக்கை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழையின் தாக்கம் தீவிரமடைந்து இருப்பதால் இன்று (ஜூலை 11) 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை:
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல்வேறு ஆறுகள் நிரம்பி இருக்கின்றது. தெற்கு ஒடிசாவிற்க்கு மேல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் வரும் 4 நாட்களுக்கு கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 12 மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பரவலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதனால் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 12 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
அதன் படி மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர காரணம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள தீவிர வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.