Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தமிழக அரசின் புதிய திட்டம்!
சாதாரண மனிதர்களை காட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நமது தமிழக அரசு பல சலுகைகளையும்,பல உதவிகளையும் செய்த வண்ணம் ஆக உள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தி அதன் மூலம் தனியார் நிறுவனம் அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் கிடைக்க செய்துள்ளது
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு:
இன்றய காலகட்டத்தில் என்ன படித்தாலும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது அரிது. அதுபோல ஒவொருவரும் படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என வேலைக்கு செல்லாமல் இருப்பது தவறு. எனவே இப்போது இருக்கின்ற காலகட்டத்திற்கு 2 டிகிரி முடித்தாலும் கிடைக்கின்ற வேலையை செய்வதே மேல் என்றே சொல்லலாம். மேலும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் வேலை கிடைப்பதும் மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி இருக்கையில் படித்தும் வேலை கிடைப்பதற்கு அலாதி பாடுபட வேண்டியுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரிக்கும் இடைநிற்றல் – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு வேலை வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் நினைக்கும்போதே மெய்சிலிர்க்க வைக்கிறது. அப்பேற்பட்ட ஒரு செயலை நமது தமிழக அரசு சாத்தியமாக்கி உள்ளது. அதாவது நேற்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து முடிந்தது. இந்த முகாமை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை மையம் வி ஆர் யுவர் வாய்ஸ் தி யுனைடெட் எஜூகேஷனல் அண்ட் சோஷியல் வெல்பேர் டிரஸ்ட் இணைந்து நடத்தினார்கள்.
Exams Daily Mobile App Download
அதில் வேலைவாய்ப்பு அதிகாரி சரவணகுமார், சுயதொழில் ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, தன் ஆர்வலர்கள் யும்னா, சரண்யா, இமானுவேல் ஆகியோர் பங்கேற்று கொண்டனர். மேலும், வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகள் 14 பேர் பங்கேற்றனர். அவர்களில் 11 பேர் பன்னாட்டு நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உடனுக்குடன் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.