பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரிக்கும் இடைநிற்றல் – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!
திரிபுரா மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் பணிபுரியும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்
கொரோனா தொற்றுநோய்களின் போது திரிபுரா முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 8,850 பள்ளி மாணவர்கள் வெளியேறியது கண்டறியப்பட்டதை அடுத்து அரசாங்கம் ‘வித்யாலயா சலோ அபியான்’ என்ற திட்டத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் இடைநிற்றல்களை கண்டறியும் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஒவ்வொரு வெற்றிகரமான மறு சேர்க்கையின் போதும் அவர்களுக்கு ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!
இது குறித்து மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் கூறுகையில், ‘தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட 8,850 மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர். ஆயினும் கூட, இன்னும் யாரேனும் இடைநின்றார்களா என்பதை அடையாளம் காண்பதற்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பைத் தொடங்குவோம்’ என்று தெரிவித்துள்ளார். இப்போது கணக்கெடுப்பை நடத்துவதற்கு கிட்டத்தட்ட 10,000 சர்வேயர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் தவிர கல்லூரி இறுதியாண்டு மாணவர்களையும் திட்டத்தில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில், இத்திட்டத்தின் கீழ் உறுப்பினராக செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி இடைநின்ற ஒவ்வொரு மாணவர்களும் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேரும் போது அந்த உறுப்பினர்களுக்கு 500 ரூபாய் கொடுக்கப்படும் என்றும் இந்த திட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மூன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படிக்கும் 1.51 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக பைகளை வழங்கவும் திரிபுரா அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.