ஹோட்டலில் வேலை செய்யும் கதிர், முல்லையை பார்க்க வரும் முருகன் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!
கதிர், முல்லை இருவரும் புதிதாக குடி வந்திருக்கும் வீட்டை பார்ப்பதற்காக முருகன் மற்றும் பார்வதி இருவரும் வருகின்றனர். மறுபக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் புதிதாக வேலைக்கு சேரும் கதிர் முதலாளியிடம் இருந்து மறைமுகமாக பாராட்டு பெறுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது குடும்பத்தை பிரிந்து வந்து புதிதாக வாழ்கையை துவங்கி இருக்கும் கதிர், பிழைப்புக்காக ஹோட்டல் ஒன்றில் வேலை செய்கிறார். அங்கு அவர் செய்யும் வேலையை பார்த்து முதலாளியிடம் இருந்து நல்ல பெயர் கிடைக்கிறது. தொடர்ந்து முல்லையை பார்க்க பார்வதி மற்றும் முருகன் இருவரும் அவரது வீட்டுக்கு வருகின்றனர். அப்போது, அங்கு இருக்கும் மூர்த்தி, தனத்தின் போட்டோவை பார்த்து இதை எதற்கு இங்க மாட்டி இருக்கிறீர்கள் என்று கோபப்படுகிறார் பார்வதி. பிறகு தனம் வந்த விஷயத்தை பற்றி அப்பா, அம்மாவிடம் கூறுகிறார் முல்லை.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து இந்த வீட்டில் இருப்பதற்கு அவர்கள் நம் வீட்டில் இருந்திருந்தால் வாடகையாவது மிச்சமாகி இருக்கும் என்று பார்வதி ஆதங்கப்படுகிறார். அப்போது, மாப்பிள்ளை எங்கே என்று முருகன் கேட்க கதிர் காரைக்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கணக்கு எழுதும் வேலைக்கு போயிருப்பதாக முல்லை சொல்கிறார். இப்போது, முல்லையின் பொறுப்பை பார்த்து சந்தோஷப்படும் முருகன் மற்றும் பார்வதிக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்து அசத்துகிறார் முல்லை.
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – மத்திய அரசு வெளியீடு!
அப்போது, நூடுல்ஸ் வேண்டாம் என்று பார்வதி சொல்ல, சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று முருகன் கூறுகிறார். அடுத்தபடியாக, மூர்த்தி வீட்டில் வைத்து மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் துணி மடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ஏற்கனவே 12 மணியாகிறது. தனம் அக்கா வேறு இல்லை. அதனால் நாம் தான் சமைக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாரா கூற நான் குழந்தைகளை பார்த்து கொள்கிறேன் நீ சமைத்து விடு என்று சமாளிக்கிறார் மீனா. இருந்தாலும், குழந்தைகளை குளிக்க வைக்கும் போது மட்டும் ஐஸ்வர்யா உதவி செய்ய வேண்டும் என்று மீனா கேட்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.