தமிழக மக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – புது நம்பர்களில் இருந்து SMS வந்தால் உஷார்!
கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஆன்லைன் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின்கட்டணம் தொடர்பான SMS மூலமாக புதுவிதமான மோசடி நடைபெறுவதாக காவல்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
ஆன்லைன் திருட்டு:
மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாக நடைபெறத் தொடங்கிவிட்டது. ஒரு செல்போனில் அனைத்து சேவைகளும் சுலபமாக முடிந்து விடுவதால் அது மக்களுக்கு எளிமையாக இருக்கிறது. ஆனால் அதன் மூலம் ஆன்லைன் மோசடியும் அதிகமாக நடக்கத் தொடங்கி இருக்கிறது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அடிக்கடி வங்கி மூலமாகவும் காவல்துறையும் எச்சரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது புதுவிதமான மோசடி கும்பல் ஒன்று கிளம்பி இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜீவன் தெரிவித்துள்ளார். அதாவது மின் துண்டிப்பு குறித்து மக்களின் மொபைல் எண்ணிற்கு புதிய நம்பர் ஒன்றில் இருந்து SMS வருகிறது. அதில் நீங்கள் மின் கட்டணம் அப்டேட் செய்யவில்லை எனவும், உடனே அப்டேட் செய்ய வேண்டும் என லிங்க் ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. அதை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணில் உள்ள விவரங்கள் எல்லாம் அவர்களுக்கு சென்றுவிடும்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
மேலும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ள நபர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி அதன் மூலம் கிப்ட் கார்டுகளை சக அலுவலர்களுக்கு அனுப்பி பண மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது, எனேவ தெரியாத எண்களில் இருந்து வரும் SMSகளை புறக்கணிக்குமாறு சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உஷாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.