தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயலாளர் தெரிவித்துள்ளார்.
மின் சார்ந்த பணிகள்
தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவு, மின் துண்டிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான கொக்கிரகுளம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
கல்லிடைக்குறிச்சி கோட்டகத்திக்கு உட்பட்ட ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கொக்கிரகுளம் துணை மின் நிலையம்:
வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், இளங்கோ நகர், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, சுப்பிரமணியபுரம் மற்றும் பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையம்:
கீழக்குத்தப்பாஞ்சான், அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை,
ஈஸ்வரியிடம் உண்மையை சொன்ன ராமமூர்த்தி, ராதிகாவை மிரட்டும் ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அதனைத்தொடர்ந்து அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வள்ளியூர் துணை மின் நிலையம் :
வள்ளியூர் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தெற்கு வள்ளியூர், வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வினியோக செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.