TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதனை படித்தால் போதும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு இப்படி படித்தால் சுலபமாக தேர்ச்சி பெற முடியும். இது தொடர்பான என்று பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இத்தேர்வு10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் தமிழகத்தில் இத்தேர்வுக்கு சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். தற்போது இத்தேர்வுக்கு இன்னும் 1 மாத காலமே உள்ளதால் தேர்வர்கள் எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
தேர்வுக்கு தயாராவது எப்படி?
1. இதற்கு முதலில் நீங்கள் ஏற்கனவே அனைத்தையும் படித்து முடித்திருந்தால் அனைத்து பகுதிகளையும் மீண்டும் திருப்பி படிக்க வேண்டும்.
2. இதையடுத்து புதிதாக நீங்கள் எதையும் படிக்க வேண்டாம். நீங்கள் படித்ததை மட்டும் திரும்ப படிக்க வேண்டும். அத்துடன் ஆன்லைனில் கிடைக்கக் கூடிய இலவச மாதிரி வினாக்களை பயிற்சி செய்து கொள்ளலாம்.
3. குரூப் 4 தேர்வுக்கு முதலில் தமிழ்மொழித்தகுதி தேர்வு என்பதால் கட்டாயமாக 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். அத்துடன் தமிழில் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுவதால் முதலில் தமிழை நன்றாக படிக்க வேண்டும்.
4. முதலில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். அதன்பின்னர் நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். தமிழில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்க வேண்டும்.
5. அடுத்ததாக கணித பாடத்தில் 25 கேள்விகள் கேட்கப்படும். இந்த 25 கேள்விகளுக்கும் சரியாக விடையளித்தால் தான் கட் மதிப்பெண் அதிகமாகும். இதற்கு கணித பாடத்திட்டத்தில் தலைப்பின் கீழ் உள்ளவற்றை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து உங்களை தயார்ப்படுத்த வேண்டும். இதில் 25 மதிப்பெண்களுக்கு 23 அல்லது 24 மதிப்பெண்கள் வரை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்க வேண்டும்.
TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!
6. இதையடுத்து பொது அறிவு பகுதியை படிக்கும்போது அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். மேலும் பள்ளி புத்தகத்தில் பெட்டிச் செய்தி, அடைப்புக்குறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவைகளை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.
7. புவியியல் பாடப் பிரிவை படிக்கும் போது இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்டவை அருகில் வைத்து கொண்டு இடங்களை பார்த்து படித்தால் தேர்வு எழுதும் போது நினைவுக்கு வரும். இது உங்களை அதிக கட் ஆப் மதிப்பெண்களை எடுக்க வைக்க பேருதவியாக இருக்கும்.
8. இறுதியாக நடப்பு நிகழ்வுகளுக்கு நாள்தோறும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு செய்திகளை கண்டறிந்து படிக்க வேண்டும்.
9. குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் பள்ளி பாடப் புத்தகங்களில் பெரும்பாலும் உள்ளது. அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்தாலே போதுமானது தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெறலாம்.