TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவித்தபடி கடந்த மே 21ம் தேதி அன்று குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றியும் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த பிறகு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே 21ம் தேதி அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இத்தேர்வுக்குரிய தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். மேலும் தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத தகுதியுடைவர்கள். இதனை தொடர்ந்து குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு முடிவுக்கு பிறகு தேர்வர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்படும். மேலும் தேர்வர்கள் முதன்மை தேர்வு எழுத குறைந்தபட்ச கட் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து கட் ஆஃப் மதிப்பெண்கள் கீழ்க்கண்ட காரணிகளை சார்ந்து நிர்ணயம் செய்யப்படுகிறது.
கட் ஆஃப் மதிப்பெண்கள்:
1. பதவிக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படும்.
2. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையை சார்ந்தது.
3. தேர்வின் சிரம நிலையை பொருத்து கணக்கிடப்படும்.
4. விண்ணப்பதாரர்கள் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையிலும் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது.