தமிழகத்தில் ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நெல்லை மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவிலில் வரும் ஜூலை 11ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அம்மாவட்டம் முழுக்க உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக எந்த வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ஓரளவுக்கு தொற்று குறைய குறைய அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதும் ஓரளவுக்கு கொரோனா பரவல் தமிழகத்தில் பரவி வரும் வேளையில் சில கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
சன் டிவி “ரோஜா” சீரியலை விட்டு விலகிய நடிகர் சிபு சூரியன் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
இந்த நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவிற்கு பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதோடு நேத்திக்கடன்களையும் செய்துவிட்டு செல்கின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
மேலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை 11ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் எதுவும் இருப்பின் அந்த மாணவர்களுக்கு வழக்கம்போல பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் வழக்கம் போல தங்களது பணிகளை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாளில் ஏதேனும் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் எந்தவித மாறுதலும் இல்லாமல் அதே நாளில் வழக்கம் போல் நடைபெறும் எனவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் ஓரளவுக்கு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.