ஓய்வூதியதாரரின் சம்பள வரம்பு நீட்டிக்கப்படுமா? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ஊழியர்கள்!
ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.15,000 வரைக்கும் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஓய்வூதியதாரரின் சம்பள வரம்பு நீட்டிக்கப்படுமா என ஊழியர்கள் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
சம்பள வரம்பு:
பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்ச ஓய்வூதிய சம்பளமாக மாதந்தோறும் ரூ.15,000 மட்டுமே வழங்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி கொண்டிருந்தாலும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.15,000 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஊழியர் அதிகபட்சமாக ரூ.7,500 வரைக்கும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இபிஎஃப் திட்டத்தில் ஒரு ஊழியர் இணைந்திருந்தால் இபிஎஸ் திட்டத்தில் எளிமையாக உறுப்பினராகிவிடலாம்.
Exams Daily Mobile App Download
மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு முன்பே இபிஎஸ் திட்டத்தில் இணைந்திருந்தால் ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் சம்பளமாக ரூ.6500 வரைக்கும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு இபிஎஸ் திட்டத்தில் இணைந்திருந்தால் அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 வரைக்கும் வழங்கப்படுகிறது. மேலும், ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் என்றால் ரூ 6428 வரைக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை – 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
ஊழியர் ஓய்வூதிய பலன்களை பெற கட்டாயமாக குறைந்தபட்சம் 10 வருடங்களாவது பணியில் இருக்க வேண்டும். மேலும், ஊழியருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதிய பலன்களை பெறலாம். முதல் ஓய்வூதியத்தில் குறைவான அளவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட ஊழியர் இறந்துவிட்டாலும் ஊழியரின் குடும்பத்தினர்கள் ஓய்வூதிய பலன்களை பெற்றுக்கொள்ளலாம். தற்போது ஓய்வூதிய சம்பள வரம்பை நீடிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதிய சம்பள வரம்பு நீட்டிக்கப்படுமா என ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.