ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – இதெற்கெல்லாம் தடை! அரசு அறிவிப்பு!
பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்கும் பொருட்டு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
கச்சாப் பொருட்களின் வினியோகத்தை குறைப்பதற்காகவும், பிளாஸ்டிக் தேவையை குறைக்கும் முயற்சிகளை எடுக்கவும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை உபயோகப்படுத்த ஊக்குவிக்கவும் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை 2016 ன் படி குட்கா, புகையிலை மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை சேமிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டது.
பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை 2020 ன்படி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை என உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, பிளாஸ்டிக் குச்சிகளுடனான இயர்பட்ஸ், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கோப்பைகள், முள் கரண்டி, கரண்டி, கத்தி, உறிஞ்சு குழாய், தட்டம், இனிப்பு பொட்டலங்களை சுற்றும் படலம், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட், பிளாஸ்டிக் என அனைத்திற்கும் தடை விதிக்கப்படவுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்க தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.