பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தான் மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றத்தை மாவட்ட நிர்வாகம் புதிய உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் செயல்பாடு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அச்சம் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் நேரடி வகுப்புகளுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆன்லைன் வழியில் தான் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஆன்லைன் வழி கற்றலினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகளை திறக்க கோரி பல்வேறு தரப்புகளில் இருந்து வலியுறுத்தப்பட்டது.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – PF இருப்பை எப்படி சரிபார்க்கலாம்? முழு விவரம் இதோ!
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் வகுப்புகள் சுழற்சி முறையிலும், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடனும் தான் பள்ளிகள் நடந்தது. 2021-2022 கல்வியாண்டு முடிவடைந்து, தற்போது 2022-2023 புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் தர்மசாலா மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் குறித்து மாவட்ட ஆணையர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரம் மற்றும் விடுமுறைகள் பற்றி கடந்த சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையில், பள்ளிகள் இனி காலை 9 மணி முதல் 3 மணி வரை முன்னர் இருந்தது போல் செயல்படும். மாவட்டத்தில் முன்னதாக வெப்ப நிலை அதிக அளவில் இருந்து வந்ததால் காலை 7:45 மணி முதல்மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வெப்ப நிலை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால், அதாவது குறைந்த வெப்ப நிலையே நிலவுவதால் பள்ளிகள் இனி வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.