தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் பணியிட மாற்றம் – புதிய அதிகாரி நியமனம்!
தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதே போல் மேலும் சில துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளர் மாற்றம்:
தமிழகத்தில் அரசு சார்பாக நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது IAS, IPS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதே போல அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது இரவு பகல் பாராது அயராது உழைத்து தொற்று பாதிப்பை குறைத்தார். அவ்வபோது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் செய்தியாளர்களை சந்தித்து தொற்று பரவலின் நிலை, அரசு மேற்கொண்டுள்ள பணிகள் போன்றவைகளை எடுத்துரைத்தார். கொரோனா தடுப்பு பணிகளில் இவரது பங்கு இன்றியமையாதது ஆகும். தற்போது இவர் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தருமபுரி ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்