தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட துணைமின் நிலையங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாளை பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
அதி கனமழை, புயல் ஆகிய இயற்கை சீற்றங்களின் போது மின்கம்பங்கள் சாய்தல், மின்தடை போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். பிற சமயங்களில் மின் கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகள் உராய்வு ஆகியவற்றினாலும் விபத்துகள் ஏற்படும். இதனை தடுக்கும் நோக்கில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 13) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்ட துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கோட்டத்தின் செயற்பொறியாளர் சகர்பான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதன்படி பயனர்களுக்கு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றம் செய்யவும், மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை அகற்றவும் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சாய்ந்த கம்பங்களை நிமிர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் எட்டயபுரம் துணை மின் நிலையத்தின் கரடிகுளம், கடலையூர், சென்னயம்பட்டி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, சென்னயம்பட்டி, காட்டுராமன்பட்டி மற்றும் கழுகுமலை துணை மின்நிலைய சி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமின்றி நாளை காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பசுவந்தனை துணை மின்நிலையத்தின் தீத்தாம்பட்டி, கோவிந்தம்பட்டி, வண்டானம், புதுப்பட்டி மற்றும் விஜயாபுரி துணை மின்நிலையத்தின் வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், தொழில்பேட்டை பகுதி, பூந்தோட்ட காலனி ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.