TNPSC தேர்வாணையத்தின் புதிய தலைவராக C முனியநாதன் நியமனம் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையம் தான் நிரப்பி வருகிறது. இந்நிலையில் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது தற்காலிக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
TNPSC தேர்வாணையம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் அரசு பணியிடங்களுக்கு முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனை TNPSC தேர்வாணையம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இரு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் குரூப் 2 & 2A தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதே போல் வரும் ஜூலை மாதம் TNPSC குரூப் 4 & VAO தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த வருடம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்வுகள் எந்த முறைகேடும் இன்றி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு தேர்வாணையத்தின் தலைமையும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
TNPSC தேர்வாணையத்தின் தலைவராக கடந்த சில வருடங்களாக மிகவும் சிறப்பாக திரு.பாலச்சந்திரன் செயலாற்றி வந்தார். கடந்த 1986ம் ஆண்டு தஞ்சாவூரின் ஆட்சியராக இருந்து இறுதியாக TNPSC தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த இவர் கடந்த ஜூன் 9ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து தேர்வாணையத்தின் தற்காலிக தலைவரை மனிதவளத்துறை அறிவித்துள்ளது. அதன்படி TNPSC தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் C முனியநாதன் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
2010ம் ஆண்டு IAS பேட்ச்யை சேர்ந்த இவர், நாகை மாவட்டத்தின் ஆட்சியாளராக பணிபுரிந்துள்ளார். இதை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை கையாண்ட இவர் தற்போது தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனி தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை இவரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.