புது வேலை தேடி மீனா அப்பாவிடம் பணத்தை கொடுக்கும் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வீட்டை விட்டு வெளியேறியதால் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் கதிர் வெளியே வந்து பணத்தை எப்படி சம்பாரித்து மீனாவின் அப்பாவிடம் கொடுப்பார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடன் வாங்கியதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளது. கதிர் மற்றும் முல்லையும் தன்மானம் தான் முக்கியம் என்பதால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . இந்நிலையில் கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியேறியதால் குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுகின்றனர். தனம் நாம என்ன செய்தோம் ஏன் அவன் வீட்டை விட்டு வெளியேறினான் என தெரியாமல் அழுது புலம்புகிறார். ஜீவாவும் கதிர் போன சோகத்தில் இருக்கிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை, நடிகர்கள் பெறும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
வீட்டை விட்டு வெளியே வந்த முல்லை கதிருக்கு முல்லையின் அம்மா அப்பா ஆதரவு கொடுக்கின்றனர். ஆனால் கதிர் வேண்டாம் நான் இங்கே இருப்பது சரியாக வராது என்பது போல பேசுகிறார். என்னால் முல்லையை சந்தோசமாக பார்த்துக் கொள்ள முடியும், முல்லைக்காக அண்ணன் வாங்கிய பணம் எல்லாத்தையும் என்னால் கொடுக்க முடியும் என கதிர் நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் என்ன வேலை செய்வது எங்கே தங்குவது என கதிருக்கு தெரியவில்லை.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் கதிரை பிரிந்து மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அதனால் கதிர் அண்ணனை பார்க்க வருவாரா அப்படி வந்தால் மீனாவின் அப்பாவிற்கு எப்படி கதிர் பணத்தை கொடுப்பார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. கதிர் புதிதாக வேலை தேடி அதில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு மூர்த்தி முல்லைக்காக வாங்கிய கடன் எல்லாத்தையும் அடைக்க இருக்கிறார். மீனாவின் அப்பா முன்னால் கெத்தாக பணத்தை கொடுப்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது