விஜய் டிவி “ராஜா ராணி” சீரியல் நடிகை வீட்டில் நடந்த விசேஷம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் வெற்றி சீரியலான ராஜா ராணி சீசன் 1-ல் வில்லியாக நடித்த ஸ்ரீதேவி அசோக் அவரது மகள் சித்தராவின் காதணி விழா சென்ற வாரம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி அசோக்:
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். அவர் சீரியலுக்கு முன்னதாக புதுக்கோட்டை மற்றும் சரவணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம் – நிலா பாப்பாவுடன் மருத்துவமனையில் அம்ரிதா!
இந்த சீரியலை விட விஜய் டிவி ராஜா ராணி சீசன் 1 சீரியலில் அவர் நடித்து பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சித்தாரா என பெயர் வைத்துள்ள நிலையில் தன்னுடைய குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி பற்றியும் அவர் வீடியோவாக பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது மகளுக்கு காதணி விழா நடத்தி இருக்கின்றனர். பிரமாண்டமாக நடந்த விழாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Exams Daily Mobile App Download
பலர் அவர்களின் குழந்தைக்கு வாழ்த்துக்களை இன்ஸ்டா பதிவுகளாக வெளியிட்டு இருந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி தன்னுடைய கர்ப்பகாலத்தில் பல பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டார். அது மற்ற பெண்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக இருந்தது. குழந்தை பிறப்பிற்கு சில மாதங்களுக்கு முன் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது குழந்தை பிறந்த பின் என்ட்ரி கொடுத்தது பலருக்கு முன்னுதாரணமாக இருந்தது.