விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம் – நிலா பாப்பாவுடன் மருத்துவமனையில் அம்ரிதா!
பாக்கியலட்சுமி சீரியலின் ஷூட்டிங் தற்போது மருத்துவமனையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சீரியலில் அடுத்ததாக என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ராதிகா அறிந்துகொண்டு கோபியை விட்டு விலகிச் செல்லலாம் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார். குடிபோதையில் என்ன செய்வதென்று தெரியாமல் அனைத்து உண்மையையும் உளறிக்கொட்டி விட்டு தற்போது ராதிகாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். பாக்கியாவிற்கும் கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்கிற சந்தேகம் வந்திருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை விட்டு விலகிய எழில்? வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
எப்போது பாக்கியாவிற்கும் முழு உண்மையும் தெரிய வரப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென எழில் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அமிர்தாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்கிற உண்மை தெரிந்தும் கூட அமிர்தாவை காதலித்து திருமணம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அவ்வப்போது சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். ரித்திகா ஷூட்டிங்கில் இருக்கும் போது நிலா பாப்பா அவ்வப்போது ரித்திகாவிடம் வந்து அம்மா அம்மா என்று சொல்லி நிறுத்தி ஷூட்டில் ரித்திகாவை நடிக்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். ஷூட்டில் நிலா பாப்பா செய்யும் அட்டகாசம் அனைத்தையும் ரித்திகா படம் பிடித்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது ரித்திகாவிற்கு காட்சிகள் இருக்கின்ற காரணத்தினால் நிலா பாப்பாவை எப்படியாவது தூங்க வைத்துவிட்டு ஷூட்டிற்கு செல்ல வேண்டுமென பாப்பாவை தூங்க வைக்கும் படியான வீடியோவை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ஷூட்டிங் மருத்துவமனையில் நடைபெற்று கொண்டிருப்பதால் அடுத்த என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.