கோபி பற்றி பாக்கியாவிடம் உண்மையை கூறும் ராதிகா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாக்கியாவும் கோபியும் இருக்கும்படியான புகைப்படத்தை குடிபோதையில் கோபி எடுத்து ராதிகாவிடம் காட்டி விடுகிறார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகா அறிந்துகொண்டு பாக்கியாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகா எப்போதுதான் அறிந்து கொள்வார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதாவது மூர்த்தி வந்து ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற நபர் நல்லவர் கிடையாது. அவரது குடும்பத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு தடவை அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை பார்த்துவிட்டு எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்கள் என கூறிவிட்டு செல்கிறார்.
கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஹேமா – ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தி சொன்னதை கேட்டதும் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. கோபியை உடனடியாக கால் செய்து வீட்டிற்கு வரும்படி சொல்லி உங்களது வீட்டிற்கு இப்பொழுதே என்னை அழைத்துச் செல்லுங்கள் என ராதிகா கோபியிடம் கேட்கிறார். ஆனால் என்னால் உன்னை என் வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாது எனக் கோபி கோபமாகக் கூறிவிடுகிறார். அப்பொழுது வீட்டை விட்டு கிளம்புங்கள் என ராதிகா கோபியிடம் கூறுகிறார். பின்பு கோபி எப்படி ராதிகாவிடம் இருந்து தப்பிப்பது என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். எப்பொழுது ராதிகாவின் வீட்டிற்கு வந்தாலும் ராதிகா இதே கேள்வியைத்தான் கேட்டபடி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் மனமுடைந்து கோபி குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். எப்பொழுது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என ராதிகா மறுபடியும் சண்டை போடுகிறார். குடிபோதையில் என்ன செய்வதென்று தெரியாமல் பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். பாக்கியா டீச்சர் தான் உங்களது மனைவியா என கோபியிடம் கேட்க ஆம் இவர்தான் எனது மனைவி எனக் கூறுகிறார். உடனே இவரும் நம்மை ஏமாற்றி விட்டாரா என கதறி அழுகிறார். பின்பும் மனம் பொறுக்காமல் பாக்கியாவை சந்தித்து உங்களது கணவர் என்னை ஏமாற்றி விட்டார் எனக் கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.