ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மதுரை டூ ராமேஸ்வரம் சேவை மீண்டும் துவக்கம்!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்திருந்த நிலையில், அதன்படி இன்று இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் சேவை மீண்டும் துவக்கம்:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதனால் பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் அனைத்து வித சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல, பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
சமீபத்தில், கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மனு கொடுத்திருந்தார். அதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை – ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் – மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் குறித்த புதிய விதிகள்!
அதன்படி இன்று மதுரை-ராமேஸ்வரம் காலை நேர பாசஞ்சர் காலை 6.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. மேலும் 2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.