மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்வு – நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்வு - நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்வு - நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்வு – நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?

ஜனவரி 2022 முதல் ஊழியர்களின் அகவிலைப்படியான டிஏ மற்றும் அகவிலை நிவாரணமான டிஆர் ஆகிய இரண்டும் அடிப்படை ஊதியத்தில் 3 சதவீதம் அதிகரித்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் ஜூலை மாத DA உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறித்த அறிவிப்பு நாளை (மே 31) வெளியாக உள்ளதாக தெரிகிறது.

அகவிலைப்படி (DA) 4% உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி (டிஏ) திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை. ஆனால் பல்வேறு அறிக்கைகள் 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று கணித்துள்ளன. மத்திய ஊழியர்களுக்கான தற்போதைய டிஏ 34 சதவீதமாக உள்ளது. மேலும் DA என்பது அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் அவர்கள் வளர்ந்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க 7வது ஊதியக் குழுவின் விதிமுறைகளின்படி , DAக்கான சதவீதம் வருடத்திற்கு இரண்டு முறை மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரியில்) ஒரு முறையும், பின்னர் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், அதாவது ஜூலை மாதத்திலும் திருத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, இது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை ( மே 31) வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. மேலும் 2022 ஜனவரி மாதத்தில் ஏஐசிபிஐ 125.1 ஆக இருந்தது. அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125 க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி ஏற்றம் ஏற்பட்டு 126 ஆக அதிகரித்தது. மேலும் மார்ச் மாதத்திற்கான புள்ளி விவரங்களின் படி, ஜூலை மாதத்தில் 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத புள்ளி விவரங்கள் வெளியான பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் வரும் மாதங்களிலும் இதே நிலை தொடர்ந்தால், அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரை இருக்கும். இதன் அடிப்படையில் அகவிலைப்படி 38% ஆக உயரும். இதன் காரணமாக சம்பளமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் வேலைக்கும் TNPSC போட்டித்தேர்வுகள் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

1. பணியாளர் அடிப்படை சம்பளம் – ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) – ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) – ரூ.19,346(மாதம்)
4. அகவிலைப்படி அதிகரிப்பு – 21,622-19,346 = ரூ 2,276(மாதம்)
5. ஆண்டு ஊதிய உயர்வு – 2,276X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளர் அடிப்படை சம்பளம் – ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) – ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) – ரூ.6120(மாதம்)
4. அகவிலைப்படி அதிகரிப்பு – 6840-6120 = ரூ.720(மாதம்)
5. ஆண்டு ஊதிய உயர்வு – 720X12 = ரூ 8,640

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!