TNPSC அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் VII-B தேர்வு
தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் துறையை தொடர்ந்து அரசுத்துறையும் காலிப்பணியிடங்களை வெளியிட்டு வருகிறது. அதற்கான TNPSC போட்டித் தேர்வுகளையும் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி குரூப் 2, குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பு வெளியானது. தற்போது குரூப் 2 தேர்வின் முதல் நிலை தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? முழு விவரங்கள் இதோ!
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. செயல் அலுவலர் பதவிக்கு மொத்தம் 42 இடங்கள் காலியாக உள்ளது. இப்பதவிக்கு இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வயது வரம்பு 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தகுதியும் விருப்பமும்உடையவர்கள் http://www.tnpscexams.in என்ற இனையதளம் வாயிலாக ஜூன் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் கீழ் எக்சிகியூட்டிவ் ஆபிசர் Grade IV பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.