‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு கோலாகலமான முறையில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு அக்காவாக நடித்து வந்த ஸ்ருதி ஷண்முக பிரியாவிற்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ஸ்ருதி ஷண்முக பிரியா. இந்த சீரியலை தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களில் நடித்தார். பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு அக்காவாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் சௌந்தர்யாவிற்கு கருப்பாக யார் இருந்தாலும் பிடிக்காது. ஸ்ருதியின் குழந்தை கருப்பாக இருப்பதால் அந்த குழந்தையை ஏற்காமல் சலிப்பு காட்டினார். இதனால் ஸ்ருதி சௌந்தர்யாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு கிளம்பினார். அதற்கு பிறகு ஸ்ருதியின் கதாபாத்திரம் சீரியலில் காட்டப்படவில்லை.
கோபியை பற்றி பாக்கியாவிடம் விசாரிக்கும் ராதிகா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!
இதற்கு பிறகு ஸ்ருதி நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஃபிரஞ்சு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் அரவிந்த் சேகர் என்கிற பாடி பில்டருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைபக்கங்களில் அதிகமாக பரவி வந்தது. நிச்சயதார்த்ததை தொடர்ந்து ஸ்ருதி அவரது நண்பர்களுடன் சேர்ந்து பேச்சுலர் பார்ட்டி கொண்டாடினர். சின்னத்திரை பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் இந்த பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்டனர்.
Exams Daily Mobile App Download
அந்த புகைப்படங்களை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இன்று ஸ்ருதிக்கும் பாடி பில்டரான அரவிந்த் சேகருக்கும் திருமணம் முடிந்துள்ளது. சீரியல் பிரபலங்கள் நண்பர்கள் என அனைவருமே திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் தொடர்ந்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருவரின் திருமண புகைப்படமும் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.