Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
அஞ்சல சேமிப்பு திட்டங்களில் ஒன்றான செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் வங்கிகளை விட அதிக லாபம் தரும் வட்டியும் அளிக்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் கால அளவும் உள்ளது. இதன் மூலம் அஞ்சலக திட்டத்தில் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டித் தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கிறது. செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுராக்ஷ யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுபவரா நீங்கள்? பட்டியலில் முதல் 10% இடம்! அறிக்கை தகவல்!
மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகள் உதவும் வகையில் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
Exams Daily Mobile App Download
அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- 18 வயதை தாண்டிய பெண்கள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்.
- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வட்டி கிடையாது. தற்போது அவை மாற்றப்பட்டுள்ளது புதிய விதிமுறைப்படி 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
- மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை மூடிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.