‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்டு – போலியான குடும்பத்தை உருவாக்கி ராதிகாவை ஏமாற்றும் கோபி?
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ராதிகா கேட்டிருக்க, வழக்கம் போல அவர் போலியான குடும்பத்தை உருவாக்கி ராதிகாவை ஏமாற்றுவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
ஒவ்வொரு எபிசோடிலும் பாக்கியாவிடம் மாட்டிக் கொள்ளாமலும், ராதிகாவிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வரும் கோபியின் சேட்டைக்கெல்லாம் எப்போது ஒரு முடிவு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதாவது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இதுவரை மனைவி பாக்கியாவுக்கு தெரியாமல் காதலி ராதிகாவுடன் பழகி வரும் கோபி கடந்த வாரம் வெளியான மெகா சங்கம எபிசோடில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். ஆனால், தன்னை காப்பாற்றி கொள்வதற்காக மூர்த்தி குடும்பத்தை கடுமையாக பேசி அவர்களை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார் கோபி.
Exams Daily Mobile App Download
இருந்தாலும், பாக்கியா மீதுள்ள அக்கறையால் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோபியின் உண்மை முகத்தை ராதிகாவிடம் சூசகமாக தெரிவித்து கிளம்பி விட்டனர். இந்த விஷயத்தை கேட்ட ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வர அவர் உடனே கோபியின் குடும்பத்தாரை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இப்போது ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கோபி செய்வதறியாது நிற்க, அவரது நண்பர் ஒரு ஆலோசனை சொல்கிறார். இந்த சூழலில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் ராதிகாவிடம் இருந்து தப்பிப்பதற்காக கோபி ஒரு போலியான குடும்பத்தை உருவாக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது.
மறுபடியும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் போர்க்களத்தை ஆரம்பிக்கும் மீனா – ப்ரோமோ ரிலீஸ்!
அதாவது, கோபி ஒரு பொய்யான மனைவி, அப்பா, அம்மா என ஒரு குடும்பத்தை உருவாக்கி மீண்டும் ராதிகாவை ஏமாற்றலாம். இதற்கிடையில் கோபி சொல்லும் பொய்யை நம்பும் ராதிகா அடுத்தடுத்த எபிசோடுகளில் கோபியின் போலியான குடும்பத்தை பார்த்து விட்டால், வெளிய போயா அயோக்கிய ராஸ்கல் என்று கோபியை வெளியே துரத்தி விடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், எல்லா திருட்டுத் தனங்களுக்கும் பெயர் போன கோபி இந்த முறையும் பாக்கியா அல்லது ராதிகாவிடம் சிக்குவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்த ஒன்றுதான்.