TNPSC இந்து சமய அறநிலையத்தில் ரூ.71,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் தற்போது அலுவலர் நிலைக்கான பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு துறைகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக பணியாளர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று நோய் பாதிப்புகள் குறைந்து, மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீண்டும் அரசு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு பணியாளர் நியமனம் தொடங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கப்படும் பதவிகளுக்கான தேர்வுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 4 பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமன அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதில் செயல் அலுவலர் நிலை 4 பதவிக்கு மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளமாக வழங்கப்படும். 2022 ஜூலை 1ம் தேதியின் படி 25 வயதை பூர்த்தி செய்தவர்களாகவும், 42 வயதிற்குள் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். 10, 12, டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் விண்ணப்ப பதிவிற்கு 150 ரூபாயும், தேர்வு கட்டணமாக ரூ.100ம் செலுத்த வேண்டும். ஜூன் 18ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். இப்பணியை பற்றிய மேலும் அதிக விவரங்களை https://www.tnpsc.gov.in/Document/tamil/13_2022_EO_GR_IV_Notfn_Tamil.pdf என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.