தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவலுக்கு பின் இந்த கல்வியாண்டு காலதாமதமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் மே மாத இறுதி வரை வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் பெற்றோர்களின் கோரிக்கைக்கு இணங்க கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மே 25 முதல் ஜூன் 19 வரை கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
அதன் படி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 10 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நிறைவடையாத நிலையில், ஜூன் மாதம் 10 முதல் 12 ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் அடுத்த கல்வியாண்டிற்கான 11, 12 ஆம் வகுப்புகள் திறப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 அல்லது 27ஆம் தேதி இந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 10 ஆம் வகுப்புகளை ஜூன் 13 ஆம் தேதி முதலும் உயர் வகுப்புகளை ஜூன் 20 அல்லது 27 ஆம் தேதியும் திறக்கலாம் என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.