DFCCIL நிறுவனத்தில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை ரெடி..!
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனம் 09.05.2022 ம் தேதியின் அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical) பணிகளுக்கு என்று ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இப்பணி குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். தகுதியானவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்கவும்.
DFCCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Dy. Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group B Service பதவிகளில், PSU பணியாளர் மற்றும் ஒத்த பணிகளில் ரூ.60,000/- முதல் ரூ. 1,80,000/- வரை 4 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Assistant Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group B Service பதவிகளில், PSU பணியாளர் மற்றும் ஒத்த பணிகளில் ரூ.50,000/- முதல் ரூ. 1,60,000/- வரை 4 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Junior Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் ஒத்த பணிகளில் ரூ.ரூ.40,000/- முதல் ரூ. 1,40,000/- வரை 4 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
- மேற்கண்ட பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
DFCCIL விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் உடனே விரைந்து இப்பதிவின் கீழுள்ள லிங்க் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு நாளைக்குள் (24.05.2022) வந்து சேரும் படி தபால் அனுப்பி பயனடைய கேட்டுக் கொள்கிறோம். இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயனடையவும்.