நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
பல வளர்ந்த நாடுகளில் கொரோனா பரவல் சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களும், யூனியன்பிரதேசங்களும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான வேகத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு தகவல்:
உலகளவில் இதுவரை கொரோனாவால் 52,63,57,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 49,60,95,400 பேர் மீண்டுள்ளனர் 62,98,575 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் சென்ற ஆண்டு இறுதி முதல் பல நாடுகளில் குறைய தொடங்கியது. அதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கிற்கான தளர்வுகள் வழங்கப்பட்டது. கொரோனாவின் வீரியம் சற்று குறைந்துள்ளதே தவிர அது முழுமையாக போகவில்லை. அதனால் சில வாரங்களில் சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!
அண்டை நாடுகளில் அதன் பாதிப்பு இருந்ததால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே, கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டது. அதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசுகையில், மாநில அரசுகள் எந்த நிலைமையிலும் தடுப்பூசிகளை வீணாக்க கூடாது.
Exams Daily Mobile App Download
கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாடு முழுவதும் ஒரு இயக்கம் போல நடத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர் முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறைகள், செங்கல்சூளைகள் என அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். தனியார் தடுப்பூசி மையங்களில் 18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஒழுங்காக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.