தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை மற்றும் உளுந்து வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ரேஷன் கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, தானியம், சமையல் எண்ணெய் மற்றும் பிற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக ரூ. 4000 வழங்கப்படும் என்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் 2 கட்டமாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல் – அரசு நடவடிக்கை!
அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதற்கு பதிலளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் பேசிய போது கட்டாயம் தமிழக குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இனிமேல் கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.