கோபி, ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த தனம் – “மகா சங்கமம்” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில் தற்போது கோபி மீது தனம் மூர்த்திக்கு சந்தேகம் வந்துள்ளது. பிறந்தநாள் விழாவில் ராதிகாவிடம் தான் கோபி பேசுகிறார் என்ற உண்மை தனத்திற்கு தெரிய வருகிறது. அது பற்றி தனம் ராதிகாவிடம் கேட்க இருக்கிறார்.
மகா சங்கமம்:
விஜய் டிவி மகா சங்கமம் சீரியலில், தற்போது தாத்தாவின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் நடக்க இருக்கிறது. அதில் பாக்கியா ராதிகாவை அழைத்து இருக்கிறார். அதனால் ராதிகா கோபியை கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என சொல்லி இருக்கிறார். இல்லையென்றால் உங்களிடம் பேசவே மாட்டேன் என சொல்ல அதை கேட்டு கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் கோபி எப்படியாவது இந்த பிறந்தநாள் விழாவை நிறுத்த வேண்டும் என பல திட்டங்களை தீட்டுகிறார்.
அர்ஷ் பிறந்த பிறகு உடல் எடையை கூட்டிய சீரியல் நடிகை ஆலியா – வைரலாகும் வீடியோ!
முதலில் நெஞ்சுவலி வந்தது போல நடிக்கிறார். குடும்பத்தில் அனைவரும் பதற உண்மை தெரிந்த கதிர் மூர்த்தியிடம் கோபி நடிப்பதாக சொல்கிறார். அதனால் கோபியை சரி செய்ய மூர்த்தி பல முயற்சிகளை செய்கிறார். பின் மூர்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் கோபி தனக்கு ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் ராதிகாவிடம் நெஞ்சு வலி என சொல்ல ஆனாலும் ராதிகா கேட்பதாக இல்லை. அதனால் கோபி கண்டிப்பாக மாட்டிக் கொள்ள போகிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தனம் மூர்த்திக்கு கோபியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் இருக்கிறது. அது பற்றி செல்வி சொன்னதும் எழில் கோபியிடம் பேசாமல் இருப்பதுமே அந்த சந்தேகத்திற்கு காரணம் அதனால் கோபியின் நடவடிக்கைகளை அவர்கள் பார்க்கின்றனர். அப்போது கோபி ராதிகாவிடம் பேசுவது தனத்திற்கு தெரிய வருகிறது. அதனால் தனம் இது பற்றி ராதிகாவிடம் பேசுகிறார். ஆனால் ராதிகா கோபியை விட முடியாது என்பது போல பேசி விடுகிறார். அதனால் தனத்திற்கு கோவம் வருகிறது. அடுத்தவர் கணவர் மீது ஆசைப்படலாமா என தனம் கேள்வி கேட்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.