கரூரில் நாளை (மே 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
கரூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் நாளை மே 14ந் தேதி சனிக்கிழமை அன்று காலை முதல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை :
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
அவ்விதமாக கரூர் மாவட்டத்தில் குளித்தலை கோட்டத்திற்குள் இருக்கும் சிந்தாமணிப்பட்டி துணைமின் நிலையத்தில் திறன் மின்மாற்றியில் அவசர பராமரிப்பு பணி நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, உடையாப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், பால்மடைப்பட்டி, சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி, வாளியாம்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
Exams Daily Mobile App Download
இப்பகுதிக்கு அருகே உள்ள பாலவிடுதி துணை மின்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான பாலவிடுதி, தளிவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரபட்டி, குரும்பப்பட்டி. கஸ்தூரிப்பட்டி பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பாடி, கழுத்தரிக்கப்பட்டி, கோடங்கிபட்டி, சின்னாம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலும், கொசூர் துணை மின்நிலையத்தை சுற்றியுள்ள கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிபட்டி, ஒட்டபட்டி மற்றும் சந்தையூர் ஆகிய பகுதிகளில் நாளை (மே 14) சனிக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.